Tuesday 10 January, 2012

பால்யம்


உடைந்து போன 
பலூனில்
விடாது 
வழிகிறது கண்ணீர்! 

திண்டுக்கல்லில் இருந்து 
திருச்சி வழியாக 
மதுரை பயணிக்கிறது
எங்கள் 
வீட்டு நிலைக்கதவு!
விலை"மதிப்பற்ற" பயணசீட்டுகளை 
கொடுத்த படி . 

பிரம்படி கனவுகளில்
நெடுந்தூக்கம் கேட்கிறது
மதிப்பெண் வரும் நாட்கள்! 

ஓட்டைப்பையில் 
வழிய விட்ட 
சில்லறையில் சிக்கிகொண்டது 
தவறிப்போன 
தின்பண்டம்.

நினைவுச்சாலைகளை
பால்யம் 
கடக்கும் போதெல்லாம் 
உதட்டோரத்தில் இளைப்பாற 
அமர்கிறது 
நிற்காது அலைகின்ற
புன்னகை! 

1 comment:

  1. சிறுபுன்னகையில் பால்யம் கடந்தாலும் நெஞ்சின் பாரம் சுமக்கும் கண்கள்.நெகிழ்கிறது வரிகள் மனதிற்குள் !

    ReplyDelete