Wednesday 4 January, 2012

இக்கணமே!

சுகிக்க  படாத
சுகங்களில்தான்
தொக்கி  நிற்கிறது  வாழ்க்கை!

நிற்கும்  இடம்  தவிர 
திக்கெல்லாம்  பச்சை,
தீண்டாத  எல்லைகளை 
தீண்டுவதே  நம்  இச்சை!

வலிக்காதவரை
கவனம்  இழந்தது
எண்சாண்  உடலின்  உறுப்பு...
நரைக்காதவரை
அர்த்தம்  இழந்தது
கடந்த  நிமிடத்தின்  சிறப்பு...

இறந்தகாலம்  இருண்டதெல்லாம்,
எதிர்காலத்திற்கு 
வண்ணம்  சேர்க்க...
நிகழ்காலத்தை  கு(லை)ழைப்பதால்தான் .

இந்த கணமே யோசிப்போம்
அடுத்தடுத்த கணங்களை நேசிப்போம்
புன்னகையே சுவாசமாய் சுவாசிப்போம் 
வாழ்க்கையை கவிதையாய் வாசிப்போம்

சுகிக்க  படாத
சுகங்களில்,
தொக்கி  நிற்க்காதினி  வாழ்க்கை!

2 comments:

  1. Aweome bro.. very true words infact.. keep writing!

    ReplyDelete
  2. Thanks Suba. Planned to write regularly. Requesting your visits and critics. Thanks.

    ReplyDelete