Sunday 14 June, 2009

காதல் தோல்வி!!!




திருமணத்திற்கு
முன்பே
விவாகரத்தானவன்
நான்!
ஜனனத்திற்கு முன்
மரணம் கண்ட
சிசு போல!

ஆனால்,
வாழ்ந்தது உண்மை!

காதல் தோல்வி
என
கல்லெறியும் எவருக்கும்,
போட்டி நடந்ததெப்போதென்று...
புத்திக்கு
உரைத்துள்ளதா?

முடிவில்தானே
தெரிய வரும்
தோல்வி
வெற்றி
அனைத்துமே?
முடிவுறாத
காதலுக்கு,
முடிவெழுதிய,
நடுவர் யார்?

தன்
சிசுவினையே
கொன்று வாழும்
உயிர்கள்
இங்கு உண்டு!
தன்
நினைவுகளை
தின்று வாழும்
நெஞ்சம்
பார்த்ததுண்டா?

உறவு
புரிதலுக்காய்,
காதல் கொள்ளும்
கடியோர்தம் எதிரினில்,
பிரிதலினில்
முழுமை கொண்ட
பெரும் காதல்
என்னது!

இன்று மட்டும் விடிய வேண்டாம்!!!!!!!!



பின்னங்கழுத்தில்
கை வைத்து
நெட்டி
வெளியே தள்ளியபடி
இழுத்து மூடிக்கொண்டது,
நிஜ வாழ்க்கையின்
இரும்புக்கதவுகள்!

விரிந்து கிடந்த
கனவு சாலையில்,
வைரங்கள் பொறுக்கி...
பூந்தோட்டங்கள் கடந்து...
இறக்கை பொறுத்தி பறந்து...
மழலையுடன் விளையாடி...
பொற்கிரீடம் சூடி...
எதிர்பட்ட சிம்மாசனம் நோக்கி,
ஓய்வெடுக்க நடக்கையில்....

என்
சிரித்த முகம்
காண சகிக்காமல்,
படாரென கை விரித்து
என்னை
உள்வாங்கிக்கொண்டு
அகோரமாய் சிரிக்கிறது
இந்த
நிஜ வாழ்க்கை!!!!!

ஒவ்வொரு காலையிலும்...