Saturday 30 May, 2009

வறண்ட மனங்களின் கிசுகிசுப்பு!






ஏப்ரல் மாதத்து
குழாயடியில்
காலி குடங்களின்
மாநாடு!

நிரம்பி கிடப்பதோ,
காலியாய் இருப்பதோ
நிரந்தரமில்லை - என
நிதர்சனமான பின்பும் ......

நடுநிசி மழையில்,
நனைந்து
நிரம்பி
தழும்பிய நாட்களைத்தான்
நினைவுகூர
தவிக்கிறது
வறண்ட மனம்!!!!

அவ்வாறே நானும்....

இமையசைப்பு




உன்
இமையசைப்பில்,
நடந்த
இசையமைப்புகளில்
சிக்கிக்கொண்டு
வியர்த்தும்
விழித்தும்
நகர்கின்றன என்
செவிட்டு இரவுகள்!