Monday 20 April, 2009

நான், நீ, மழை!!!





என்
கனத்துப்போன
வாழ்க்கையை,
எதிரொலித்து...
மௌனம் பேசுகிறது
இந்த
கறுத்துப்போன மேகம்!

அவள்
நினைவுகளின் வருடலில்,
சிதறிய
வார்த்தைகளாய்,
முனக துவங்கியது
தூரல்!

இப்போது...
உச்ச ஸ்தாயில்,
சேராத ஸ்ருதியில்,
கொட்டிக்கொண்டிருக்கிறது
ஒரு
மழைப்பாடல்!

இது
என் உயிரின்
ஒப்பாரியா?
உன் ஞாபக
கச்சேரியா? - என
அலசிப்பார்க்க
அனுமதிக்காமல்...

மயக்கியே
போய்விட்டது....
உன்
மூச்சுக்காற்றாய்
சில்லிட்ட
சாரல்!

Tuesday 14 April, 2009

நான் அறிந்திருக்கவில்லை நீ இல்லாமல் போகும் எதிர்காலம் ஒன்றுண்டென்பதை!




உன்
பிரிவின் மிச்சமாய்,
எஞ்சியிருப்பது....
இந்த
கவிதையும், இருதுளி
கண்ணீரும்!

மனதோ
நிரந்தர ஈழமாய்,
உன் நினைவோ
உயிரினில் ஆழமாய்
மாரிப்போனதேன் வாழ்க்கை?

கடைசியாய்....
உன்
கழுத்தோடு கை வளைத்து,
காதுமடல் கடித்த
கணங்களில்,
நான் அறிந்திருக்கவில்லை
நீ
இல்லாமல் போகும்
எதிர்காலம்
ஒன்றுண்டென்பதை!

நானும்
நீயும்
சேர்ந்து கால் பதித்த
கடற்கரைக்கு,
நமது
கால் தடங்களை
மட்டும்
பத்திரமாய் காப்பாற்ற
கட்டளையிட்டோம்!


எத்தனையோமுறை
நீ
என்னை பார்த்து
குரைத்த பொழுதுகளில் கூட,
காதல்
மறந்ததில்லை
உன்
கண்கள்!

நீ
ஈரப்படுத்திய என்
கன்னங்களை
இன்று...
உன்
நினைவுகள் ஈரப்படுத்துகின்றன!


நான்கு பேர்
அமர ஏதுவான
பெஞ்சில்,
நாமிருவராய்
அமர்ந்த போதும் ...
உடலுரசி ,
என் மடியினில்
உன் தலை கொடுத்து
ஒய்வு கொண்ட பொழுதுகளில் ....
நம்
ஐந்து வருட
சிநேகமேனும்
ஓடுடைத்து
காதல் பொரிந்தது!

ரோசி...

எங்கள் வீட்டு
செல்ல
நாய் குட்டியே.....
காணாமல் போன
உன்னோடு
சேர்த்து
என்
வாழ்க்கையையும்
தேடி கொண்டிருக்கிறேன்!

Monday 13 April, 2009

இன்று இவ்வாறு தோன்றுகிறது....





இந்த வெறுமையான நாட்கள் என்னை எவ்வளவோ யோசிக்க வைக்கிறது...

என்னையே சற்று தள்ளி நின்று பார்த்து நிதானிக்க முடிகிறது. இதற்காக பலருக்கு நன்றி சொல்ல வேண்டும்...

சோளிங்கநல்லூர் அறை நிறைய வாசிக்கவும் அதை விட அதிகமாய் யோசிக்கவும் வைக்கிறது. இனி எல்லாம் சிறப்பாய் இருக்கும் என நம்பிக்கை வருகிறது...
இவ்வாறெல்லாம் எழுத தூண்டியதற்கு சுகுமாருக்கு நன்றி..

( ஏன்டா இவ்வளவு கேவலமா கண்டபடி கிறுக்குற - ன்னு சுகு நிச்சயம் திட்டமாட்டன். ஆனா அத புரிய வைக்கிற மாதிரி நிச்சயம் ஏதாவது சொல்வான்.)

இன்னும் நமக்கென்று ஆற அமர உட்கார்ந்து blog-a அலுவலகம் ஏதும் இல்லாததால் இவ்வாறு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்த வரை மனதை பதிவு செய்து விட முடிவு செய்தாயிற்று!

இப்போதெல்லாம் எந்த உறவுகளும் வேணாம்னு தோணுது... ஆனா சுகு அத சொல்லும்போது மட்டும் ஏத்துக்க முடியல,.

ஏ சி போட்ட காருக்குள் பேசன் பத்திரிக்கை வாசிக்கும் ஏழு வயது வெள்ளை தோல் குழந்தையும், பிட்சைக்கார அம்மாவின் கையை பற்றிக்கொண்டு தம்பியை இடுப்பில் சொருகி கொண்டு அம்மாவின் கையில் சேர்ந்த சில்லறையை கணக்கு பார்க்கும் கருப்பு குழந்தையும் ஒரே ரோட்டில்....

என் வாழ்க்கையும் இதில் ஏதோ ஒரு இடைப்பட்ட புள்ளியில் நகர்கிறது...


நடிகர்கள் சிக்ஸ் பேக்! ஈழப் பிரச்னை! சத்யம் மோசடி! தேர்தல்!அசிங்கமான அரசியல்! வேலைவாய்ப்பு!எதிர்காலம்! அயன்! ஆனந்த தாண்டவம் - னு எல்லாம் பேசிவிட்டு .... குடித்த டீ க்கு யார் பணம் குடுக்க போகிறார்கள் என்ற கேள்வியை மனதிலும் விரல்களை பாக்கெட்டிலும் விடும் சராசரி வாழ்கையை தாண்டி ....

செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது...
செய்வேன் என்ற நம்பிக்கையில் இவ்வாறு கிறுக்கும்போது .... நாளை செய்த பின் இதை படிப்பது நன்றாக இருக்கும் என எண்ணமுடிகிறது!

நீ மட்டுமே எல்லாமாய்.....




எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லாத ஒரு நாளில் செல்வா சுகுமாருக்கு அனுப்பிய குறுந்தகவலில் இந்த வரிகளுக்கான கருவை அனுப்பி அதை எதாவது செய்ய முடியுமா? என்று கேட்க அதை சுகு என்னை முயற்சிக்க சொன்னான்.

அவன் எழுத்துக்கு இதுவெல்லாம் சுண்டைக்காய்.... நல்ல படைப்பென்று அவன் கருதாத எதையும் அவன் படைப்பதே இல்லை.

நமக்கு அவ்வாரெல்லாம் வரைமுறை இல்லாததால் அவன் அனுப்பிய கரு வார்த்தைகளையே ஒன்றுக்கு கீழ் ஒன்றாய் முயன்று... இவ்வாறு கொடுத்தாயிற்று.....

என்னால்
இழக்க முடிந்த
ஒரே விசயமாய்
நீ
ஆன பின்பு,
எனக்கு கிடைத்த
ஒரே விசயமாயும்
நீதான் இருக்க முடியும்!



நீ
நான்
பெற்றிருக்கவே முடியாமல்
பெற்ற
ஒரே ஒன்று!
அதே போல்தான்
நான்
இழக்கவே விரும்பாமல்
இழந்துவிட்ட
ஒரே ஒன்று!



என்னால்
உன்னை மட்டுமே
பெற முடித்து!
அதனால்,
இழந்தாலும் - அது
உன்னை மட்டும்தான்!



எல்லோரையும்
தீண்டி செல்லும்
ஜனனம், மரணம் போல
எனக்கென்று
கிடைத்த ஒரே
" எல்லாம் " நீ !
ஆகவே
என்
எல்லா இழப்புமாய்
" ஒன்றாய் " நீ!

உன் நினைவுகள்...












நுரை தள்ளும்
மாடாய்,
நடக்கிறேன்...
உன்
நினைவெனும்
பொதி சுமந்து!


இறக்கி வைக்க
மனமும் இல்லை!
சென்று சேர்க்க
வழியும் இல்லை!


தினமும்
முனகிக்கொண்டே
கண் விழிக்கிறேன்...
உன்
சாட்டையடி ரணங்களுடன்!!!

ஜே ஜே குறிப்புகளில் இருந்து ......

ஜே ஜே குறிப்புகளில் இருந்து ......

நான் என் நாட்குறிப்பில் எழுதிய ஒவ்வொரு சத்தத்தையும் அப்படியே எதிரொலிப்பதை வியந்து கொண்டே இருக்கிறேன் ....




"நிம்மதி என்பது துளி கூட இல்லை. எப்போதும் ஒரு மனக்கலவரம். பிறரால் ஒதுக்க படுகிறேன் என்ற உணர்வு ஏற்படுகிறது. யாருக்குமே என்னை பிடிக்கவில்லை என்கிற உணர்வு ஏற்படுகிறது.முறுக்கபடும் நூல்கள் போன்றவை என் உறவுகள்.முதலில் தளர்ச்சி, தொய்வு, அதன் பின் வலு, அழகு, இறுக்கம். மேலும் முறுக்கத்துக்கு ஆளாகின்றன. இப்போது அறுபட்டு போய் விடுகின்றன. வலுவின் உச்சகட்டத்தில் முருக்கேற்றுதல் நிறுத்தப்பட வேண்டும்.அந்த நிமிஷம் எனக்கு தெரிவதில்லை."






இது எல்லோருக்கும் ஏற்படுகிற மனநிலை என புரிகிறது. சுகுமார் இந்த புத்தகத்தையே புறக்கணித்து விட்டான். சதீஷ் என்னை இந்த புத்தகத்தை படிப்பதை நிறுத்த சொல்கிறான். எனக்கு ஜே ஜே வார்த்தைகள் பிடித்திருக்கிறது அப்படியே அவளை பிடித்ததை போல.





"மனம் ஓயாமல் தத்தளித்து கொண்டே இருக்கிறது. உள்ளுர இனந்தெரியாத பாரம். அருமையான பல உறவுகள். அனேகமாக எல்லாம் புளித்து போய் விட்டன. என்னிடம் குறைகள் இல்லை என்று நான் எண்ணவில்லை.ஆனால் எனக்கு எட்டிய வரையில், என்னை விசாரணை செய்து கொண்டே இருக்கிறேன். என் உண்மை உணர்ச்சியும் பார்வையும் தான் எனக்கு எதிராக ஒரு வளையத்தை உருவாக்குகிறது."







எவ்வாறு இவ்வளவு சரியாக என் உணர்வுகளை (நம் உணர்வுகளாக கூட இருக்கலாம்) இவரால் 50 வருடங்களுக்கு முன்னையே பதிவு செய்ய முடிந்தது?


என்னதான் இருந்தாலும் உள்ளுக்குள் யாரோ ஒருவர் (அவளாய் கூட இருக்கலாம் ) என் வார்த்தைகளை எனக்கே சொல்கிறார்கள்.
வாழ்க்கை மிகவும் நீளமானது.இது மகிழ்ச்சியால் மட்டுமே நிரம்பி இருக்க வேண்டும், அது நம்மால் முடியும்.


நானாய் போன நான்!


உங்கள் எல்லோரையும் போல் போட்டோவுக்கான செயற்கை சிரிப்போடு, இருக்கும் நான் தாமோதரன் ......





உங்களோடு இப்போது blog - a நான் பிறந்த நாள் 10.03.1985...