Monday 20 April, 2009

நான், நீ, மழை!!!





என்
கனத்துப்போன
வாழ்க்கையை,
எதிரொலித்து...
மௌனம் பேசுகிறது
இந்த
கறுத்துப்போன மேகம்!

அவள்
நினைவுகளின் வருடலில்,
சிதறிய
வார்த்தைகளாய்,
முனக துவங்கியது
தூரல்!

இப்போது...
உச்ச ஸ்தாயில்,
சேராத ஸ்ருதியில்,
கொட்டிக்கொண்டிருக்கிறது
ஒரு
மழைப்பாடல்!

இது
என் உயிரின்
ஒப்பாரியா?
உன் ஞாபக
கச்சேரியா? - என
அலசிப்பார்க்க
அனுமதிக்காமல்...

மயக்கியே
போய்விட்டது....
உன்
மூச்சுக்காற்றாய்
சில்லிட்ட
சாரல்!

No comments:

Post a Comment