Monday 13 April, 2009

இன்று இவ்வாறு தோன்றுகிறது....





இந்த வெறுமையான நாட்கள் என்னை எவ்வளவோ யோசிக்க வைக்கிறது...

என்னையே சற்று தள்ளி நின்று பார்த்து நிதானிக்க முடிகிறது. இதற்காக பலருக்கு நன்றி சொல்ல வேண்டும்...

சோளிங்கநல்லூர் அறை நிறைய வாசிக்கவும் அதை விட அதிகமாய் யோசிக்கவும் வைக்கிறது. இனி எல்லாம் சிறப்பாய் இருக்கும் என நம்பிக்கை வருகிறது...
இவ்வாறெல்லாம் எழுத தூண்டியதற்கு சுகுமாருக்கு நன்றி..

( ஏன்டா இவ்வளவு கேவலமா கண்டபடி கிறுக்குற - ன்னு சுகு நிச்சயம் திட்டமாட்டன். ஆனா அத புரிய வைக்கிற மாதிரி நிச்சயம் ஏதாவது சொல்வான்.)

இன்னும் நமக்கென்று ஆற அமர உட்கார்ந்து blog-a அலுவலகம் ஏதும் இல்லாததால் இவ்வாறு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்த வரை மனதை பதிவு செய்து விட முடிவு செய்தாயிற்று!

இப்போதெல்லாம் எந்த உறவுகளும் வேணாம்னு தோணுது... ஆனா சுகு அத சொல்லும்போது மட்டும் ஏத்துக்க முடியல,.

ஏ சி போட்ட காருக்குள் பேசன் பத்திரிக்கை வாசிக்கும் ஏழு வயது வெள்ளை தோல் குழந்தையும், பிட்சைக்கார அம்மாவின் கையை பற்றிக்கொண்டு தம்பியை இடுப்பில் சொருகி கொண்டு அம்மாவின் கையில் சேர்ந்த சில்லறையை கணக்கு பார்க்கும் கருப்பு குழந்தையும் ஒரே ரோட்டில்....

என் வாழ்க்கையும் இதில் ஏதோ ஒரு இடைப்பட்ட புள்ளியில் நகர்கிறது...


நடிகர்கள் சிக்ஸ் பேக்! ஈழப் பிரச்னை! சத்யம் மோசடி! தேர்தல்!அசிங்கமான அரசியல்! வேலைவாய்ப்பு!எதிர்காலம்! அயன்! ஆனந்த தாண்டவம் - னு எல்லாம் பேசிவிட்டு .... குடித்த டீ க்கு யார் பணம் குடுக்க போகிறார்கள் என்ற கேள்வியை மனதிலும் விரல்களை பாக்கெட்டிலும் விடும் சராசரி வாழ்கையை தாண்டி ....

செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது...
செய்வேன் என்ற நம்பிக்கையில் இவ்வாறு கிறுக்கும்போது .... நாளை செய்த பின் இதை படிப்பது நன்றாக இருக்கும் என எண்ணமுடிகிறது!

No comments:

Post a Comment