Monday 13 April, 2009

நீ மட்டுமே எல்லாமாய்.....




எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லாத ஒரு நாளில் செல்வா சுகுமாருக்கு அனுப்பிய குறுந்தகவலில் இந்த வரிகளுக்கான கருவை அனுப்பி அதை எதாவது செய்ய முடியுமா? என்று கேட்க அதை சுகு என்னை முயற்சிக்க சொன்னான்.

அவன் எழுத்துக்கு இதுவெல்லாம் சுண்டைக்காய்.... நல்ல படைப்பென்று அவன் கருதாத எதையும் அவன் படைப்பதே இல்லை.

நமக்கு அவ்வாரெல்லாம் வரைமுறை இல்லாததால் அவன் அனுப்பிய கரு வார்த்தைகளையே ஒன்றுக்கு கீழ் ஒன்றாய் முயன்று... இவ்வாறு கொடுத்தாயிற்று.....

என்னால்
இழக்க முடிந்த
ஒரே விசயமாய்
நீ
ஆன பின்பு,
எனக்கு கிடைத்த
ஒரே விசயமாயும்
நீதான் இருக்க முடியும்!



நீ
நான்
பெற்றிருக்கவே முடியாமல்
பெற்ற
ஒரே ஒன்று!
அதே போல்தான்
நான்
இழக்கவே விரும்பாமல்
இழந்துவிட்ட
ஒரே ஒன்று!



என்னால்
உன்னை மட்டுமே
பெற முடித்து!
அதனால்,
இழந்தாலும் - அது
உன்னை மட்டும்தான்!



எல்லோரையும்
தீண்டி செல்லும்
ஜனனம், மரணம் போல
எனக்கென்று
கிடைத்த ஒரே
" எல்லாம் " நீ !
ஆகவே
என்
எல்லா இழப்புமாய்
" ஒன்றாய் " நீ!

No comments:

Post a Comment