Monday 13 April, 2009

ஜே ஜே குறிப்புகளில் இருந்து ......

ஜே ஜே குறிப்புகளில் இருந்து ......

நான் என் நாட்குறிப்பில் எழுதிய ஒவ்வொரு சத்தத்தையும் அப்படியே எதிரொலிப்பதை வியந்து கொண்டே இருக்கிறேன் ....




"நிம்மதி என்பது துளி கூட இல்லை. எப்போதும் ஒரு மனக்கலவரம். பிறரால் ஒதுக்க படுகிறேன் என்ற உணர்வு ஏற்படுகிறது. யாருக்குமே என்னை பிடிக்கவில்லை என்கிற உணர்வு ஏற்படுகிறது.முறுக்கபடும் நூல்கள் போன்றவை என் உறவுகள்.முதலில் தளர்ச்சி, தொய்வு, அதன் பின் வலு, அழகு, இறுக்கம். மேலும் முறுக்கத்துக்கு ஆளாகின்றன. இப்போது அறுபட்டு போய் விடுகின்றன. வலுவின் உச்சகட்டத்தில் முருக்கேற்றுதல் நிறுத்தப்பட வேண்டும்.அந்த நிமிஷம் எனக்கு தெரிவதில்லை."






இது எல்லோருக்கும் ஏற்படுகிற மனநிலை என புரிகிறது. சுகுமார் இந்த புத்தகத்தையே புறக்கணித்து விட்டான். சதீஷ் என்னை இந்த புத்தகத்தை படிப்பதை நிறுத்த சொல்கிறான். எனக்கு ஜே ஜே வார்த்தைகள் பிடித்திருக்கிறது அப்படியே அவளை பிடித்ததை போல.





"மனம் ஓயாமல் தத்தளித்து கொண்டே இருக்கிறது. உள்ளுர இனந்தெரியாத பாரம். அருமையான பல உறவுகள். அனேகமாக எல்லாம் புளித்து போய் விட்டன. என்னிடம் குறைகள் இல்லை என்று நான் எண்ணவில்லை.ஆனால் எனக்கு எட்டிய வரையில், என்னை விசாரணை செய்து கொண்டே இருக்கிறேன். என் உண்மை உணர்ச்சியும் பார்வையும் தான் எனக்கு எதிராக ஒரு வளையத்தை உருவாக்குகிறது."







எவ்வாறு இவ்வளவு சரியாக என் உணர்வுகளை (நம் உணர்வுகளாக கூட இருக்கலாம்) இவரால் 50 வருடங்களுக்கு முன்னையே பதிவு செய்ய முடிந்தது?


என்னதான் இருந்தாலும் உள்ளுக்குள் யாரோ ஒருவர் (அவளாய் கூட இருக்கலாம் ) என் வார்த்தைகளை எனக்கே சொல்கிறார்கள்.
வாழ்க்கை மிகவும் நீளமானது.இது மகிழ்ச்சியால் மட்டுமே நிரம்பி இருக்க வேண்டும், அது நம்மால் முடியும்.


No comments:

Post a Comment