தினசரி கனவுகளில்
படபடத்துக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைத்தாள்!
வெறிச்சோடிய
தெருவின் நிசப்தத்தை
சுமந்த படி,
வாடிக்கையாளன் தேடும்
விபச்சாரியின் கண்களோடு,
கால் தடங்கல் ஏதுமில்லா
கடற்கரை மணல் போல...
நானோ
எழுதும் பொருள்
தேடிக் களைத்து
பேனாவை மூடிவிட்டு
அடுத்த நாள்
கனவுக்காய்,
பாதுகாக்கிறேன்
என் வெள்ளைத்தாளை!
ஏற்பட்டுவிட்ட வலிகளுக்காகவும், எழுதும் போது நேரும் நினைவுகளின் வருடலுக்காகவும் ... உங்கள் வாசிப்பின் போது நேரும் மன நிறைவுக்காகவும், உங்கள் விமர்சனத்திற்கான என் காத்திருப்புக்க்காகவும், எழுதுவதில் மகிழ்ச்சி!!!!
Saturday, 19 September 2009
தேடிக்கொண்டிருக்கிறேன்...
வழியறியா காட்டிலிருந்து
அள்ளி எடுத்து,
அரவணைத்து,
பாலைவன சுழியில்
தள்ளி
பறந்து போனாய்!
தண்ணீர் தேட மறந்தது,
உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன் நான்!
Subscribe to:
Posts (Atom)