Saturday, 19 September 2009

வெள்ளைத்தாள்!

தினசரி கனவுகளில்
படபடத்துக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைத்தாள்!
வெறிச்சோடிய
தெருவின் நிசப்தத்தை
சுமந்த படி, 
வாடிக்கையாளன் தேடும் 
விபச்சாரியின் கண்களோடு, 
கால் தடங்கல் ஏதுமில்லா 
கடற்கரை மணல் போல... 

நானோ
எழுதும் பொருள்
தேடிக் களைத்து
பேனாவை மூடிவிட்டு  
அடுத்த நாள்
கனவுக்காய், 
பாதுகாக்கிறேன் 
என் வெள்ளைத்தாளை!

தேடிக்கொண்டிருக்கிறேன்...




வழியறியா காட்டிலிருந்து
அள்ளி எடுத்து,
அரவணைத்து,
பாலைவன சுழியில்
தள்ளி
பறந்து போனாய்!
தண்ணீர் தேட மறந்தது,
உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன் நான்!