Tuesday 14 April, 2009

நான் அறிந்திருக்கவில்லை நீ இல்லாமல் போகும் எதிர்காலம் ஒன்றுண்டென்பதை!




உன்
பிரிவின் மிச்சமாய்,
எஞ்சியிருப்பது....
இந்த
கவிதையும், இருதுளி
கண்ணீரும்!

மனதோ
நிரந்தர ஈழமாய்,
உன் நினைவோ
உயிரினில் ஆழமாய்
மாரிப்போனதேன் வாழ்க்கை?

கடைசியாய்....
உன்
கழுத்தோடு கை வளைத்து,
காதுமடல் கடித்த
கணங்களில்,
நான் அறிந்திருக்கவில்லை
நீ
இல்லாமல் போகும்
எதிர்காலம்
ஒன்றுண்டென்பதை!

நானும்
நீயும்
சேர்ந்து கால் பதித்த
கடற்கரைக்கு,
நமது
கால் தடங்களை
மட்டும்
பத்திரமாய் காப்பாற்ற
கட்டளையிட்டோம்!


எத்தனையோமுறை
நீ
என்னை பார்த்து
குரைத்த பொழுதுகளில் கூட,
காதல்
மறந்ததில்லை
உன்
கண்கள்!

நீ
ஈரப்படுத்திய என்
கன்னங்களை
இன்று...
உன்
நினைவுகள் ஈரப்படுத்துகின்றன!


நான்கு பேர்
அமர ஏதுவான
பெஞ்சில்,
நாமிருவராய்
அமர்ந்த போதும் ...
உடலுரசி ,
என் மடியினில்
உன் தலை கொடுத்து
ஒய்வு கொண்ட பொழுதுகளில் ....
நம்
ஐந்து வருட
சிநேகமேனும்
ஓடுடைத்து
காதல் பொரிந்தது!

ரோசி...

எங்கள் வீட்டு
செல்ல
நாய் குட்டியே.....
காணாமல் போன
உன்னோடு
சேர்த்து
என்
வாழ்க்கையையும்
தேடி கொண்டிருக்கிறேன்!

1 comment: