Monday 30 November, 2009

காதல் !!!


 
பொட்டல் காட்டு
மொட்டை பனைமரமாய்,
நான்!

நிழல் தேடி
ஒதுங்கிய  மைனா,
நீ!

நீ
பறந்து போன
பின்னும்,
காதல் செய்ய...

பத்திரமாய்
பாதுகாக்கிறேன்
நீ
விட்டுச்சென்ற
ஒற்றை சிறகை!!!

6 comments:

  1. http://naayakan.blogspot.com/2009/11/blog-post_30.html

    see here. there is a kavithai potti.

    ReplyDelete
  2. நல்லாருக்கு, எங்க போனீங்க இவ்வளவு நாளா

    வந்து வந்து பார்த்துட்டு போயிட்டேன்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  3. தம்பி தாமு, வணக்கம். பல காலம் உங்களை பார்த்து (படித்து அல்ல) வருபவன் என்ற முறையில் சில..

    உங்கள் வளர்ச்சி நன்று.(எழுதுவதில்), ஆனால் உடன் படுவதில் தான் சில சிக்கல் எனக்கு. நல்லா இருக்கு / கிளப்பிடிங்க / உங்கள் சேவை ..... இப்படி என்னால உங்களை உசுப்பேத்த முடியாது.உங்கள் சுய புலம்பல்கள் உங்களையும் தண்டி வேறு தளத்துக்கு போகணும். அது இது எது னு நீங்க தான் முடிவு பண்ணனும்.

    உங்கள் பாழப்போன காதலை விடுத்தது / கோவங்கள் (என்று இருந்தால்) பதிவு பண்ணுங்க. எனை பொறுத்தவரை அல்லது நம்மை பொறுத்தவரை நீங்கள் எதை சார்ந்து இருக்கிறீர்கள் என்பதை பொருத்து தான் நீங்கள் யார் என்று தெரிய வரும்.

    இதை உங்களிடம் எதிர்பர்ப்பதர்க்காண நேரம் வந்து விட்டதாகவே நாம் உணர்கிறோம். உங்கள் எழுத்து உண்மையையும் , வலியையும் , தேடலையும் , விவாதத்தையும் உண்டு பண்ணும் போது மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன்....

    நட்புடன் ...
    ஒரு பழைய நண்பன்!

    ReplyDelete
  4. @விதுஷ்

    தகவலுக்கு நன்றி விதுஷ் !

    ReplyDelete
  5. @ கவிதை(கள்)

    அலுவல் தேடும் அலுவலில் கவனம் ...

    எதிர்பார்ப்பிற்கு நன்றியை தவிர என்ன சொல்வதென தெரியவில்லை.

    இனி அதிகம் எழுத முயல்வேன் .

    கொடுக்கும் உற்சாகத்திற்கு நன்றி விஜய் ...

    ReplyDelete
  6. நீ
    பறந்து போன
    பின்னும்,
    காதல் செய்ய...
    பத்திரமாய்
    பாதுகாக்கிறேன்
    நீ
    விட்டுச்சென்ற
    ஒற்றை சிறகை!!!
    Very nice...

    ReplyDelete