ஏற்பட்டுவிட்ட வலிகளுக்காகவும், எழுதும் போது நேரும் நினைவுகளின் வருடலுக்காகவும் ... உங்கள் வாசிப்பின் போது நேரும் மன நிறைவுக்காகவும், உங்கள் விமர்சனத்திற்கான என் காத்திருப்புக்க்காகவும், எழுதுவதில் மகிழ்ச்சி!!!!
Monday 30 November, 2009
வெள்ளைத்தோல்காரி !!!
தூங்கும் போதும்
குழந்தை சிரிப்பு,
கூந்தல் கோதும்
தன்னிச்சை விரல்கள்,
குறு குறு கண்கள்,
உதட்டு சுழிப்பு,
குறும்பு சேட்டை,
எப்படி அடையாளம் சொல்ல?
எல்லா
பேருந்து பயணத்திலும்
வந்து போகிறாள்
ஒரு
வெள்ளைத்தோல்காரி
அப்படியே
உன் நகலாய்!
நீயும்
ஞாபகப் "படுத்திக்"கொண்டுதான்
இருப்பாய்,
எங்காவது...
எவனுக்காவது...
எவளையாவது...
Subscribe to:
Post Comments (Atom)
//நீயும்
ReplyDeleteஞாபகப் "படுத்திக்"கொண்டுதான்
இருப்பாய்,
எங்காவது...
எவனுக்காவது...
எவளையாவது... //
மிக ரசனைக்குரிய கவிதை நண்பரே...
நன்றாக வந்துள்ளது.
நல்லாருக்கு.நிறைய எழுதுங்க
ReplyDelete