Monday 30 November, 2009

வெள்ளைத்தோல்காரி !!!



தூங்கும் போதும்
குழந்தை சிரிப்பு,
கூந்தல் கோதும்
தன்னிச்சை விரல்கள்,
குறு குறு கண்கள்,
உதட்டு சுழிப்பு,
குறும்பு சேட்டை,

எப்படி அடையாளம் சொல்ல?

எல்லா
பேருந்து பயணத்திலும்
வந்து போகிறாள்
ஒரு
வெள்ளைத்தோல்காரி
அப்படியே
உன் நகலாய்!

நீயும்
ஞாபகப் "படுத்திக்"கொண்டுதான் 
இருப்பாய்,
எங்காவது...
எவனுக்காவது...
எவளையாவது...

2 comments:

  1. //நீயும்
    ஞாபகப் "படுத்திக்"கொண்டுதான்
    இருப்பாய்,
    எங்காவது...
    எவனுக்காவது...
    எவளையாவது... //

    மிக ரசனைக்குரிய கவிதை நண்பரே...

    நன்றாக வந்துள்ளது.

    ReplyDelete
  2. நல்லாருக்கு.நிறைய எழுதுங்க

    ReplyDelete