Saturday 18 July, 2009

பிள்ளை மனம்!




நாட்களுக்கு
பின்னாள்
ஒளிந்து கொண்டு,
எட்டித்
தலை காட்டுகிறது
உன் ஞாபகங்கள்!

மழலை
கிறுக்கலாய்
திருத்தங்களுக்கு
அப்பாற்பட்டு,
சிலேட்டை நிறைக்கிறது
நீ
கொடுத்து,
எடுத்து சென்ற
காதல்....

நிகழ்கால நிஜத்தை
ஒவ்வொரு முறையும்,
புத்திக்கு ஊட்ட....
பின்னாலேயே
திரியவிடுகிறது,
நீ களவாடிய
என் சுயம்!

சிற்றெறும்பாய், நீ
கடித்து சென்ற
இடத்தை
சொல்ல தெரியாமல்,
கால் பரத்தி,
கை விரித்து....
விசும்பி அழுகிறது
என்
பிள்ளை மனம்!

No comments:

Post a Comment