ஏற்பட்டுவிட்ட வலிகளுக்காகவும், எழுதும் போது நேரும் நினைவுகளின் வருடலுக்காகவும் ... உங்கள் வாசிப்பின் போது நேரும் மன நிறைவுக்காகவும், உங்கள் விமர்சனத்திற்கான என் காத்திருப்புக்க்காகவும், எழுதுவதில் மகிழ்ச்சி!!!!
Saturday 18 July, 2009
பிள்ளை மனம்!
நாட்களுக்கு
பின்னாள்
ஒளிந்து கொண்டு,
எட்டித்
தலை காட்டுகிறது
உன் ஞாபகங்கள்!
மழலை
கிறுக்கலாய்
திருத்தங்களுக்கு
அப்பாற்பட்டு,
சிலேட்டை நிறைக்கிறது
நீ
கொடுத்து,
எடுத்து சென்ற
காதல்....
நிகழ்கால நிஜத்தை
ஒவ்வொரு முறையும்,
புத்திக்கு ஊட்ட....
பின்னாலேயே
திரியவிடுகிறது,
நீ களவாடிய
என் சுயம்!
சிற்றெறும்பாய், நீ
கடித்து சென்ற
இடத்தை
சொல்ல தெரியாமல்,
கால் பரத்தி,
கை விரித்து....
விசும்பி அழுகிறது
என்
பிள்ளை மனம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment