Monday 13 July, 2009

சுகுமார் சொல்......



எல்லாப் பொழுதுகளிலும் ஏதேனும் இவ்வாறு கிடைத்துக்கொண்டே இருக்கும் உன்னிடம், அசைபோட. இன்று, இது எனக்கானதாய் மிக நேரடியாக கிடைத்ததில் சற்று சலனம்தான் அடி மனதில்.

உன்னை போல் நேர்த்தியாய் எழுத இனிமேலாவது முயற்சிக்கிறேன். உனது படைப்பொன்று எனது blog - இல் ஒதுங்கியதில், சற்றே கணம் கூடியது இந்த தளத்திற்கு. நன்றி...

கவிதைக்கும், என் மேல் எடுத்துக்கொள்ளும் கவனத்திற்கும்.

--------------------------------
நீங்களில் இருக்கிற நான்
நாங்களில் இருந்து எழுதிக்கொள்வது ........

ஒரு மழை நாளில்
பிரியம் என்றாய். காதல் என்றாய்.
விளங்க முடியா கவிதை என்றாய்.
இன்னொரு மழை நாளில்
தோல்வி என்றாய். காயம் என்றாய்.
மீளாத்துயரம் என்றாய்.

நண்பா- பதிலென்று உனக்கு எதைச் சொல்ல?

யுத்த நாளுண்டு. அதற்க்கு மறுநாளுண்டு.
மழை நாளென்று எதுவும் நினைவில் இல்லை.
இருப்பதும் இல்லாதிருப்பதுமே
வெற்றியும் தோல்வியும்.
"மீளாத்துயரமென்று எதுவும் இல்லை
மீளாதிருத்தலே துயரம்!"

குறுக்கும் நெடுக்குமாக
எல்லாத்திசைகளையும் தொட்டு திரும்புகின்றன
உங்கள் காலக்கோடுகள்
ஆரம்பமும் முடிவும் தெரியாமல்
வட்டப்பாதையில் சுற்றுகின்றன
எங்கள் யுத்த கோடுகள்
உங்கள் பூமியை போல.

சுதந்திரம் என்பது ஒற்றைத்தூரிகை
நீங்கள் தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்!!!

- சுகுமார்

No comments:

Post a Comment