Tuesday 25 August, 2009

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!!!




இலவசமாய்
வாங்கி வந்த,
வாழ்க்கையில்...
கடன்பட்டே கழிகின்றன,
கணங்கள்....

சுயம்
இழந்து, பிண்டமாய்...
சூன்யம்
தொட்டுத் திரும்பி,
பிணமாய்
சாத்தப் பட்டிருக்கிறது
மனம்!

பணமென்றும்
பொருளென்றும்
உறவென்றும்
உயிரென்றும் - தினசரி
வயிரென்றும்
வளருது இலக்கு!

இலக்கணம்
மீறிய
புதுக்கவிதை,
இவன்தன்
இலக்கடையும்
வழியை - நீ
விளக்கு!!!

கனல் எரியும்
கண்களோடு,
தணல் தகிக்கும்
புனலாய் மாறி,
நின்னை
சரணடைந்தேன்
கண்ணம்மா!

எனை
மீண்டும்,
அக்கினி குஞ்சொன்றாய்
செய்யம்மா!!!

No comments:

Post a Comment