ஏற்பட்டுவிட்ட வலிகளுக்காகவும், எழுதும் போது நேரும் நினைவுகளின் வருடலுக்காகவும் ... உங்கள் வாசிப்பின் போது நேரும் மன நிறைவுக்காகவும், உங்கள் விமர்சனத்திற்கான என் காத்திருப்புக்க்காகவும், எழுதுவதில் மகிழ்ச்சி!!!!
Tuesday 25 August, 2009
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!!!
இலவசமாய்
வாங்கி வந்த,
வாழ்க்கையில்...
கடன்பட்டே கழிகின்றன,
கணங்கள்....
சுயம்
இழந்து, பிண்டமாய்...
சூன்யம்
தொட்டுத் திரும்பி,
பிணமாய்
சாத்தப் பட்டிருக்கிறது
மனம்!
பணமென்றும்
பொருளென்றும்
உறவென்றும்
உயிரென்றும் - தினசரி
வயிரென்றும்
வளருது இலக்கு!
இலக்கணம்
மீறிய
புதுக்கவிதை,
இவன்தன்
இலக்கடையும்
வழியை - நீ
விளக்கு!!!
கனல் எரியும்
கண்களோடு,
தணல் தகிக்கும்
புனலாய் மாறி,
நின்னை
சரணடைந்தேன்
கண்ணம்மா!
எனை
மீண்டும்,
அக்கினி குஞ்சொன்றாய்
செய்யம்மா!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment