
திருமணத்திற்கு
முன்பே
விவாகரத்தானவன்
நான்!
ஜனனத்திற்கு முன்
மரணம் கண்ட
சிசு போல!
ஆனால்,
வாழ்ந்தது உண்மை!
காதல் தோல்வி
என
கல்லெறியும் எவருக்கும்,
போட்டி நடந்ததெப்போதென்று...
புத்திக்கு
உரைத்துள்ளதா?
முடிவில்தானே
தெரிய வரும்
தோல்வி
வெற்றி
அனைத்துமே?
முடிவுறாத
காதலுக்கு,
முடிவெழுதிய,
நடுவர் யார்?
தன்
சிசுவினையே
கொன்று வாழும்
உயிர்கள்
இங்கு உண்டு!
தன்
நினைவுகளை
தின்று வாழும்
நெஞ்சம்
பார்த்ததுண்டா?
உறவு
புரிதலுக்காய்,
காதல் கொள்ளும்
கடியோர்தம் எதிரினில்,
பிரிதலினில்
முழுமை கொண்ட
பெரும் காதல்
என்னது!