ஏற்பட்டுவிட்ட வலிகளுக்காகவும், எழுதும் போது நேரும் நினைவுகளின் வருடலுக்காகவும் ... உங்கள் வாசிப்பின் போது நேரும் மன நிறைவுக்காகவும், உங்கள் விமர்சனத்திற்கான என் காத்திருப்புக்க்காகவும், எழுதுவதில் மகிழ்ச்சி!!!!
Thursday 3 September, 2009
எங்கள் கவலையெல்லாம்.......
நெடுஞ்சாலை முட்புதராய்
புறக்கணிக்கப்பட்ட
வாழ்க்கையில்,
எதேச்சையாய் நேரும்
காயப்படுத்துதலில்தான்
கிடைக்கப் பெறுகிறது
கவனம் !!!
மலர்ச்செடியாய்
இல்லாது போன
கவலையை தாண்டி,
முட்கள்
தானாய் சென்று
காயப்படுத்தாதெனும்
உண்மையையும் தாண்டி,
மலர்செடியாய்
இருந்து இருந்தால்,
தவிர்க்கப்பட்டிருக்கும்
காயங்கள்
எண்ணியே
எங்கள் கவலையெல்லாம்...!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment